Friday, October 27, 2006

மாங்காடு காமாட்சி...

மாங்காடு காமாட்சி...
- பாடல்: சைதை முரளி.

மாங்காடு காமாட்சி மனவானில் அவளாட்சி
பாங்கோடு துதிப்போர்க்கு பரிவோடு அருளாசி
(மாங்காடு)

ஸ்ரீசக்ரம்தான் அவளின் ச்ருங்கார இருப்பிடம்
சிவனது இடப்பாகமோ மங்காத மணிமகுடம்
(மாங்காடு)

சங்கரர் துதிகேட்க சங்கரன் கண் பொத்தினாள்
சடுதியில் காத்திட மாங்காட்டில் நின்றாள்
மனத்துயர் போக்கிட மாறன் வில்லை ஏந்தினாள்
மன்மதனை எரித்திட்ட மணாளனின் சுந்தரியே!
(மாங்காடு)

எலுமிச்சை கனி ஏற்றே எழும் இச்சை தீர்ப்பவள்
முக்கனியில் முதல் கனியாம் வனத்தில் வசிப்பவள்
ஒருக்காலும் கைவிடாள் ஓடோடி வருவாள்
ஒருகாலில் தவம் புரியும் காமாட்சி உமையவள்!
(மாங்காடு)

No comments: